Monday, September 20, 2010

துருக்கி நடுவீதியில் தனியே தவழ்ந்து சென்ற குழந்தை (வீடியோ இணைப்பு)

துருக்கியில் உள்ள அன்டால்யா நகரம் எப்போதும் பரபரப்பாக இயங்கும். அங்குள்ள நெடுஞ்சாலையின் ஓரம் ஒரு பெண் தனது ஒரு வயது குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு பிச்சை எடுக்க சென்று விட்டாள்.

அப்போது, கண் விழித்த குழந்தை தானாக தொட்டிலில் இருந்து இறங்கி வீதியில் தவழ ஆரம்பித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். நடுரோட்டில் குழந்தை தவழும் தகவலை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர்.

இதனால் வாகனம் ஓட்டிகள் வேகத்தை குறைத்து குழந்தை மீது மோதாமல் கவனமாக சென்றனர்.

இதற்கிடையே, இந்த காட்சியை துருக்கி டி.வி.க்கள் ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தின. தகவல் அறிந்ததும் குழந்தையின் தாய் அங்கே ஓடி வந்தாள். தனது குழந்தையை அங்கிருந்து தூக்கி சென்று பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment