Monday, September 20, 2010

அமெரிக்காவில் அணு ரகசியத்தை விற்ற விஞ்ஞானி தம்பதி கைது

அமெ‌ரி‌க்கா‌வி‌ல் அணு ரக‌சிய‌த்தை ‌வி‌ற்ற அ‌ர்ஜெ‌ன்டினாவை சே‌ர்‌ந்த த‌ம்ப‌தி கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.
அர்ஜென்டினாவை சேர்ந்த பெட்ரோ லியோனார்டோ மாஸ்செரோனி (75)- மார்ஜோரி ராஸ்பி மாஸ்செரானி (67) த‌ம்ப‌திகளான இவ‌‌ர்க‌ள் இருவரும் அணு விஞ்ஞானிகள்.
அமெரிக்க குடியுரிமை பெற்ற இவ‌ர்கள் அமெரிக்காவில் உள்ள லாஸ் அலமாஸ் நகரில் உள்ள தேசிய ஆய்வகத்தில் பணி புரிந்தனர். அப்போது, அணு ஆயுதங்கள் தயாரிக்க அவற்றின் ரகசியங்களை வெனிசுலா நாட்டுக்கு விற்றதாக புகார் கூறப்பட்டது.
இதை‌த் தொட‌ர்‌ந்து அவ‌ரிக‌ளிட‌ம் அமெரிக்காவின் உளவுத்துறை‌யின‌ர் (எப்.பி.ஐ.)‌ நட‌த்‌திய தீவிர ‌விசாரணையில் அது உண்மை என தெரிய வந்ததை தொடர்ந்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment