Thursday, September 2, 2010

இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா

இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் வீட்டுப் பணிப் பெண்ணாக கடமையாற்றிய ஆரியவதி என்ற பெண் மீது எஜமானர் சித்திரவதைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் மீது ஆணிகள் ஏற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் பரவலாக தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனவும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சவூதி அரேபிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுக்களில் சந்தேகம் நிலவுவதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரக அதிகாரிகளும் நேற்று தகவல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment