அதாவது மற்றவர்களை கட்டித் தழுவி தனது அன்பை வெளிப்படுத்தி வருகிறார். 3 மாதத்தில், 10 ஆயிரம் பேரை கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளார். அதில்தான் மட்டுமின்றி தனது நண்பர்களையும் ஈடுபடுத்தி வருகிறார்.
தைபேயில் உள்ள ரெயில் நிலையத்தில் நேற்று இந்த நூதன பிரசாரத்தை நடத்தினார். அப்போது, ஒரு நாளில் மட்டும் 700 பேரை கட்டித் தழுவினார்.
இந்த பிரசாரத்துக்கு ஆதரவு கிடைத்துள்ளது. இருந்தும் பலர் வெட்கப்பட்டு ஓட்டம் பிடித்தனர். தைவானை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் உள்பட பலர் சிரித்தப்படி தங்களின் “கட்டிப்பிடி" அன்பை ஏற்றுக்கொண்டதாக யெ ஜோ-லிங் தெரிவித்துள்ளார்.
யெ ஜோ-லிங் தைபே அருகேயுள்ள யிங்கோ நகரில் உள்ள செராமிக்ஸ் தொழிற் சாலையில் தொழிலாளியாக உள்ளார். கடந்த ஜூலை மாதம் இந்த நூதன பிரசாரத்தை தொடங்கினார். இது வரை 7 ஆயிரம் பேரை கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நூதன பிரசாரம் கடந்த 2004-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சீடோனியம் ஜுயோன் மான் என்பவரால் தொடங்கப்பட்டது. தற்போது அது பல நாடுகளில் பரவியுள்ளது.
No comments:
Post a Comment