Saturday, August 28, 2010

அமெரிக்காவை கலக்கிய பெண் கொள்ளை கும்பல்: 10 பேர் போலீசில் சிக்கினர்

பூலான்தேவி பெண் என்றாலும் அவருக்கு கீழ் இருந்தவர்கள் அனைவரும் ஆண்கள். ஆனால் அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் முழுக்க, முழுக்க பெண்களால் கொண்ட கொள்ளைகும்பல் ஒன்று செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்ளை கும்பலில் இருந்த அனைவரும் 17 வயதில் இருந்து 21 வயதுக்கு உட்பட்ட பெண்கள். கல்லூரி மாணவிகளும் இதில் இருந்தனர்.
சாலையில் செல்வோரை துப்பாக்கி முனையில் மிரட்டி வழிப்பறி செய்வது, கடைக்குள் திடீரென புகுந்து பணம், விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடிப்பது, கார் திருடுவது போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர்.
“லேடிமாக்” என்ற பெயரில் இந்த கொள்ளை கும்பல் செயல்பட்டு வந்தது.
கொள்ளை கும்பலில் மொத்தம் 21 பேர் இருந்துள்ளனர். அவர்களில் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற வர்களை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment